Discover and read the best of Twitter Threads about #நம்மாழ்வார்

Most recents (11)

#வைகாசி_விசாகம்#நம்மாழ்வார் திருநக்ஷத்திரம் ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை. நம்மாழ்வார் வைஷ்ணவ குல பதி என்று போற்றப்படுகிறார். திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் (32 ஆண்டுகள் மட்டுமே), அவர் புளிய மரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, Image
ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார்.  நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.  · திருவிருத்தம் (ரிக் வேத சாரம்)  · திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்)  · பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்)  · திருவாய்மொழி (சாம வேத சாரம்)  நம்மாழ்வாரின்
பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாரன்" என்றும் அழைக்கப்படுகிறார் - சம்ஸ்கிருத வேதங்களின் சாரத்தை தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் வழங்கியவர்.  ஆழ்வார்கள் பாடிய 4000 திவ்ய பிரபந்தங்களின் சாரமாக திருவாய்மொழி போற்றப்படுகிறது.
Read 5 tweets
#ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் திருவுருவம் இவர். சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்படுகிறார். #சுதர்சனம் என்பதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்ட), நல்லவர்களுக்கு
அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது இவர் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, 16 கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் 16 வித
ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும். அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு ஆயுதங்கள்
Read 26 tweets
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
#விசிஷ்டாத்வைதம் #ஸ்ரீவைஷ்ணவம் #த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்
சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்
எளிய பொருள்.
#திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும
Read 10 tweets
It is #fascinating to read #Hultzsch books on South Indian Inscriptions published by the #ASI in 1899. In volume III, he has written in detail about many temples.

/1
In chapter one, he has recorded most inscriptions in the #Ukkal #Vishnu #temple called Pūvaṇimāṇikka-Viṣṇugraham, i.e., the temple of ‘Bhuvanamāṇikya’. This word means, 'the ruby of the world'.

/2
The deity of the temple is #Tiruvāymoḻi #Dēvar. This is the name of that portion of #Nālāyiradivyaprabandham which was composed by Śaṭagopa alias Nammāḻvar.

#உக்கல், #திருவாய்மொழி, #நம்மாழ்வார், #சடகோபன்

/3
Read 4 tweets
#நற்சிந்தனை
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை. “யாராவது என்னை தூக்கி விடுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்தார். "அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை
காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள். நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்.
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே. இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த
கயிறை பிடித்துக் கொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையுடன் கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர்.
Read 19 tweets
#ஆழ்வார்_பாசுர_அமுதமொழி
ஸதாம் கதயே நமஹ என்பதை #நம்மாழ்வாரின் நிலை விளங்க வைக்கிறது.
திருக்குடந்தையில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடிகளிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகல் இல்லை! நீயே அடியேனை இப்பிறவி பெரும் ImageImage
துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்” என்று திருமாலிடம் மன்றாடிய #நம்மாழ்வார்
“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.
“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத்
தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் மூலமாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள்
Read 13 tweets
#வராஹர் #சரமஸ்லோகம் #பூமிதேவிக்கு_உபதேசம்
ஹிதன்யாக்‌ஷனை வதம் செய்து பூமி பிராட்டியை மீட்ட போது, பூமாதேவி அழுது கொண்டிருந்தாள். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள், “நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா?” என்று கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி சொல்கிறாள், “நான் கூக்குரல்
இட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா?” என்று கேட்டாள். பெருமாளும் பூமி பிராட்டிக்குப் பதில் (உபதேசம்) சொல்லத் தொடங்கினார்.
#வராக_சரமச்லோகம்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா;  
விஸ்வரூபம் ச மாமஜம்;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்;  நயாமி பரமாம் கதிம்;
எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும் போது என்னையே நினத்துக்
Read 12 tweets
#சடாரி சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப் படுகிறது. சடகோபன நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக
அறியப் படுகிறார். சடாரி சாற்றப் படுவதற்கு வைணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் கர்ம
வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது. மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
Read 14 tweets
வரலாற்றை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு #இந்துகள்_இடையே_ஒற்றுமை_ஓங்கும். ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமிய படைகளிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இந்துகள் பலியாகினர். தலை சீவி கொல்லப்பட்ட 12000 இந்துகளில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் தியாகத்தின்
மகிமை புரியும். கொடிய இஸ்லாமிய படைத் தலைவனை கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டால் அன்றைய இந்துகள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது தெரிய வரும். ஆழ்வார்களிள் அதிகம் கொண்டாடப் படும் #நம்மாழ்வார் பிராமணர் அல்லர். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்பதை தெரிந்து கொண்டால்
இந்துமதத்தின் சமத்துவம் புரியும். கவிச் சக்கரவர்த்தி #கம்பர் பிராமணர் அல்லர். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்பதை அறிந்து கொண்டால் அக்காலத்தில் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைத்தது என்பது புரியும். கல்வியிற் பெரியர் கம்பரே வியந்து நின்ற
Read 9 tweets
#நம்மாழ்வார் #திருவாய்மொழி
திருவாய்மொழி சாம வேதத்தின் பொருள். திருவாய்மொழிக்கு அழகு பொருந்திய வாய்மை ஆகிய மொழி என்று பொருள். இது வேதத்துக்கு நேர். எனவே சத்யம் ஆனது. பராங்குச நாயகியாக நாயிகா பாவத்தில் நம்மாழ்வார் அனுபவித்த பாசுரங்களும், எம்பெருமானை அடைய அவன் அர்ச்சை நிலையில்
பல்வேறு திவ்ய தேசங்களில் குடி கொண்டுள்ள எம்பெருமான் மீது பக்தியுடன் பாடியதே திருவாய்மொழி. கிருஷ்ணாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் பராசர பட்டர் நம்மாழ்வாரை கிருஷ்ண கிருஷ்ணா தத்வம் என்று போற்றுகிறார். ராமானுஜர் திருவாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே தமது காலக்ஷேபங்களை செய்து
வந்ததும் விசிஷ்டாத்துவைதத்தை ஏற்படுத்தியதும் இந்த உயரிய நூலின் சிறப்பம்சமாகும். 1102 பாசுரங்களைக் கொண்ட நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஸ்ரீராமானுஜர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருக்குருகைப் பிள்ளைப் பிரான் என்பவர் ஆறாயிரப்படி (ஆறாயிரம் கிரந்தங்கள் - ஒரு க்ரந்தம் என்பது 32
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!